பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

 

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

ஊரடங்கு காலகட்டத்தில் பல திருமணங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக இளம்வயது காதலர்களுக்கு திருமணம் என்பது ஊரடங்கில் அதிகம் நடந்து வருவதாக தெரிகிறது. அதேபோல் பல குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் அன்புதாசன். 20 வயதான இவர் அரசு உறுப்பு கல்லூரியில் பிஏ மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இதனால் இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோவில் கைது!

இதனால் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். இது குறித்து அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவர் அன்புதாசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் . பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.