‘6 மாதம் கர்ப்பம்’ 12ம் வகுப்பு வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைது!

 

‘6 மாதம் கர்ப்பம்’ 12ம் வகுப்பு வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைது!

கன்னியாகுமரி அருகே 18 வயது மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அடுத்த குக்கிராமம் பகுதியில் வசித்து வந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமி பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளைஞர் ஒருவரை காதலிக்க, சிறுமியை கர்ப்பதாக்கிவிட்டு அந்த இளைஞர் தப்பியிருக்கிறார். சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

‘6 மாதம் கர்ப்பம்’ 12ம் வகுப்பு வகுப்பு மாணவியை ஏமாற்றிய இளைஞர் போக்சோவில் கைது!

இது குறித்து போலீசார் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தன்னை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை போலீசார் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதற்கு தான் மட்டுமே பொறுப்பு அல்ல, அந்த சிறுமி அழைத்ததால் தான் தனிமையில் இருந்ததாக கைதான இளைஞர் போலீசரிடம் தெரிவித்துள்ளார். மேலும், சிறுமி தனக்கு தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்த நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.