நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!

 

நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!

நாமக்கல் அடுத்த பாப்பிநாயக்கன் பட்டியில் உள்ள கோழி பண்ணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணேஷ் என்ற பீகார் இளைஞர் வேலை செய்து வந்துள்ளார். இவரும் ஒடிசா தம்பதி குடும்பமும் இணக்கமாக இருந்துள்ளது.

நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!
இந்நிலையில் நேற்று கோழிப்பண்ணைக்கு வந்த கணேஷ் சிறுமியுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது யாரும் கவனிக்காத நேரத்தில் சிறுமியை அருகில் உள்ள முட்புதருக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கூச்சலிட்டு கத்த அங்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் கணேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

நல்லவன் போல பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்.. போக்சோவில் கைது!

இதனையடுத்து சிறுமிக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.