சாலை விபத்தில் இறந்த மகள்.. ஆதரவின்றி சாலையில் தவித்த மூதாட்டியை முகாமில் சேர்ந்த இளைஞர்கள்; குவியும் பாராட்டு!

 

சாலை விபத்தில் இறந்த மகள்.. ஆதரவின்றி சாலையில் தவித்த மூதாட்டியை முகாமில் சேர்ந்த இளைஞர்கள்; குவியும் பாராட்டு!

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி வள்ளியம்மாள்(70). இவர் மகளுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் ஆதரவு இல்லாமல் தவித்த மூதாட்டி ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள சாலையோரங்களில் மாதக்கணக்கில் வசித்து வந்திருக்கிறார்.

சாலை விபத்தில் இறந்த மகள்.. ஆதரவின்றி சாலையில் தவித்த மூதாட்டியை முகாமில் சேர்ந்த இளைஞர்கள்; குவியும் பாராட்டு!

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மழை பெய்ததால் சாலையில் இருக்க முடியாமல் தவித்து வந்த அந்த மூதாட்டியை தன்னார்வலர்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் மதுரை சோசியல் வெல்பர் டிரஸ்ட் நண்பர்களுக்கு இந்த மூதாட்டி பற்றி தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற டிரஸ்ட் நபர்கள், மூதாட்டியை அங்கிருந்து மீட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மூதாட்டிக்கு நலத்திட்ட உதவிகள் கொடுக்கும் வரை உடன் இருந்து, தனியார் முகாமில் சேர்த்துள்ளனர். இதனிடையே மூதாட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. தன்னலம் கருதாது மூதாட்டிக்கு உதவிய இந்த இளைஞர்களுக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.