கடன் தொல்லையால் மன உளைச்சல்: இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

 

கடன் தொல்லையால் மன உளைச்சல்: இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அழகாபுரி பகுதியில் வசித்து வந்தவர் வீரசிங்கம் (27). இவர் கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கண்மாய்க்கு சென்ற அவர் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்துக் குதித்துள்ளார். அதோடு, பீர் பாட்டிலால் கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கடன் தொல்லையால் மன உளைச்சல்: இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

அவ்வழியே சென்ற பொதுமக்கள், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், வீர சிங்கத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுபோ வைத்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீரசிங்கம் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் கடன் தொல்லையால் ஊரை விட்டு வெளியேறியதும், இரண்டு நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை தொடர்ந்து வருகிறது.