இளம்பெண் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

 

இளம்பெண் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

பட்டுக்கோட்டை அருகே ஒரு தலைக் காதல் விவகாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகள் மோனிகா. வயது 18. இவர் திருச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்ததால் முத்துப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி வந்துள்ளார். இவரது உறவினர் சிவசங்கரன்(28). இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் சிவசங்கரன் மோனிகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மோனிகா இவரது காதலை ஒப்புக் கொள்ளவில்லை. எனினும், மோனிகாவை மணந்துகொள்ள அவரது பெற்றோரிடம் கேட்டுள்ளார்.

இளம்பெண் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு… கொடூரமாக கொலை செய்த இளைஞர்!

அவர்களும் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சிவசங்கரன் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த மோனிகாவை அம்மிக் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த மோனிகாவை மீட்ட உறவினர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனிடையே, சிவசங்கரனை பிடித்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.