“அந்தரத்தில் தொங்க விட்டு, …”பெண்ணை கடத்தியதால் நடந்த கொடுமை

 

“அந்தரத்தில் தொங்க விட்டு, …”பெண்ணை கடத்தியதால் நடந்த கொடுமை

ஒரு பெண்ணை கடத்தி சென்றவரின் உறவினர்களை மரத்தில் கட்டி வைத்து அந்தரத்தில் தொங்க விட்ட கொடுமை நடந்துள்ளது

“அந்தரத்தில் தொங்க விட்டு, …”பெண்ணை கடத்தியதால் நடந்த கொடுமை

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ரூப்பூர் கிராமத்தில் ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு இளைஞன் ரூப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியை  கடத்திச் சென்றார் . ஜூலை 17 அன்று, அந்த இளைஞன்  மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திங்களன்று, சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் மொஹாபத்பூர் கஞ்ச் கிராமத்தில் பெண்ணை கடத்திய வாலிபரின்  உறவினரை பார்த்தனர் .. பின்னர் அவர்கள் அந்த உறவினர்களை பிடித்து அவரின்    கைகளையும் கால்களையும் கட்டி மரத்தில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டனர் .அதன்பிறகு, அவர்கள் அவரை பல மணி நேரம் கொடூரமாக அடித்தார்கள். இந்தச் செயலின் வீடியோவை சிலர் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர் .

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் உலா வர தொடங்கியதும், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர் . அந்த வீடியோவின் அடிப்படையில், காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்தனர்

அந்த வைரல் வீடியோவில் காணப்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள். இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மொராதாபாத் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.