அனுமதியின்றி நடந்த சேவல் சண்டையால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

 

அனுமதியின்றி நடந்த சேவல் சண்டையால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள நாலுகால்குட்டை பகுதியில் அனுமதி இல்லாமல் சேவல் சண்டை நடந்ததுள்ளது. அதனை பார்க்க 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்ட நிலையில், சேவலின் காலில் கத்தியை கட்டி சண்டை போட வைத்துள்ளனர். அப்போது, சேவலின் அருகே வந்த நெடுங்கூரைச் சேர்ந்த முருகேசன்(30) என்பவரின் மீது சேவலின் காலில் இருந்த கத்தி குத்தியுள்ளது. இதனால் அவரது தொடையில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு போரடிக் கொண்டிருந்துள்ளார்.

அனுமதியின்றி நடந்த சேவல் சண்டையால் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

அதனையடுத்து முருகேசன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கத்தி தொடை நரம்பில் குத்தியதால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இச்சமபவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் சேவல் சூதாட்டம் நடத்தியதும், இப்பகுதியில் அதிக அளவு சேவல் சண்டை நடைபெறுவதும் அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே அவை வெளியே தெரிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சேவல் சண்டை நடத்திய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.