மரத்தின் மீது பைக் மோதி விபத்து: மாடு குறுக்கே பாய்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த கதி!

 

மரத்தின் மீது பைக் மோதி விபத்து: மாடு குறுக்கே பாய்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த கதி!

கன்னியாகுமரி அருகே பைக்குக்கு குறுக்கே மாடு பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரத்தின் மீது பைக் மோதி விபத்து: மாடு குறுக்கே பாய்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த கதி!

கன்னியாகுமரி, மாத்தார் அருகே உள்ள செம்பிறாவிளை பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரின் மகன் அபிசோன் (23). பொறியியல் பட்டதாரியான இவர் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலை அபிசோன் தனது பைக்கில் அழகிய மண்டபத்தில் இருக்கும் தனது கடையை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அச்சமயம் எதிர்பாராத விதமாக மாடு ஒன்று, அபிசோன் சென்ற பைக்கின் குறுக்கே விழுந்துள்ளது.

மரத்தின் மீது பைக் மோதி விபத்து: மாடு குறுக்கே பாய்ந்ததால் இளைஞருக்கு நேர்ந்த கதி!

இதில் நிலைதடுமாறிய அபிசோன், பைக்கை அருகே இருந்த புளியமரத்தின் மீது மோதியிருக்கிறார். விபத்தில் படுகாயம் அடைந்த அபிசோனை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அபிசோன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் வேளையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.