மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞர் பரிதாப உயிரிழப்பு!

 

மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞர் பரிதாப உயிரிழப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் கொத்தியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலுமணி (35).இவர் திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் தங்கி, அங்கிருக்கும் தொழிப்பேட்டையின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்று விட்டு, பைக்கில் தான் வசித்து வரும் ரூமுக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார் பாலுமணி. வரும் வழியில் புட்லூர் ரயில்வே கேட் அருகே மேம்பால பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை கவனிக்காத பாலுமணி, தனது பைக்குடன் பள்ளித்தில் விழுந்துள்ளார். அந்த இடத்தில் எந்த மின்விளக்கும் பொருத்தப்பட வில்லையாம்.

மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞர் பரிதாப உயிரிழப்பு!

பள்ளத்தில் விழுந்ததால் படுகாயம் அடைந்த பாலுமணி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாலுமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை க்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசிய மக்கள், மேம்பாலத்திற்காக குழி தோண்டப்பட்ட பிறகு அங்கு எந்த வித பாதுகாப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அங்கு மின்விளக்கும் பொருத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.