தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட்டை கலந்து குடித்த இளைஞர் மரணம்!

 

தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட்டை கலந்து குடித்த இளைஞர் மரணம்!

சென்னை வால்டாக்ஸ் சாலை சர்காபுரத்தில் வசித்து வந்தவர் கவுதம் (25). கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும் வேலை விட்டு வீடு திரும்பியவுடன் இவர் மது அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று கவுதம் தனது வீட்டில் மது அருந்தியிருக்கிறார். முதலில் மதுவில் தண்ணீர் கலந்து குடித்த கவுதம், போதையில் மீண்டும் தண்ணீர் கலப்பதற்கு பதிலாக ஆசிட்டை எடுத்து கலந்துள்ளார்.

தண்ணீர் என நினைத்து மதுவில் ஆசிட்டை கலந்து குடித்த இளைஞர் மரணம்!

மதுவில் இருப்பது ஆசிட் என்று அறியாமல் அதனை அவர் குடித்த நிலையில், உடனே மயக்கம் அடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கவுதம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கவுதமின் நண்பர்களுடன் யானைகவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்ததால் கவுதம் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.