வேலை கிடைத்ததால் ‘நேர்த்திக் கடனாக’ தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

 

வேலை கிடைத்ததால் ‘நேர்த்திக் கடனாக’ தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

கன்னியாகுமரி அருகே வேலை கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வதாக வேண்டிக் கொண்ட இளைஞர் ஒருவர் வேலை கிடைத்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் எள்ளுவிளை பகுதியில் வசித்து வரும் செல்ல சுவாமி என்பவரின் மகன் நவீன் (32). இவர் என்ஜினியரிங் படித்து முடித்த நிலையில், வேலை கிடைக்காமல் இருந்திருக்கிறார். இவருக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் என்பதால் வேலை கிடைத்தால் உயிரையே மாய்த்துக் கொள்வதாக வேண்டிக் கொண்டுள்ளார்.

வேலை கிடைத்ததால் ‘நேர்த்திக் கடனாக’ தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

இந்த நிலையில், அவருக்கு மும்பையில் பேங்க் ஆஃப் இந்தியாவில் உதவி மேலாளர் பணி கிடைத்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்த அவர், நேற்று மும்பையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு வந்து தனது நண்பரை சந்தித்துள்ளார். அவரது சகோதரரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார் நவீன். இதன் பின்னர், அங்கிருந்து புத்தேரி பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வேலை கிடைத்ததால் ‘நேர்த்திக் கடனாக’ தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

நவீன் தனது பெற்றோருக்கு எழுதி வைத்த கடிதத்தில், தான் வேண்டுதலை நிறைவேற்ற தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு தனது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்தையும் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முட்டாள்தனமான வேண்டுதலால், நவீன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.