மன உளைச்சலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை- போலீஸ் விசாரணை!

 

மன உளைச்சலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை- போலீஸ் விசாரணை!

திருச்சி:

திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் வயது 26 கூலி வேலை செய்து வந்த இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்றுஅவருடைய பெற்றோர்கள் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த இளங்கோவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த இளங்கோவனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சப் -இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் விசாரனை நடத்தினர்.

மன உளைச்சலில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை- போலீஸ் விசாரணை!

பின்னர் இளங்கோவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இளங்கோவன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்