எடமலைப்பட்டி புதூர் பயங்கரம்: இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பல்

 

எடமலைப்பட்டி புதூர் பயங்கரம்: இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பல்

திருச்சி எடமலைபட்டி புதூர் நத்தர் நகர் பகுதியில் பெண்கள் தண்ணீர் பிடிக்கும் போது கஞ்சா அடித்துக்கொண்டு தகராறு செய்த சிலர் மீது அப்பகுதி இளைஞர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் 3 நாட்களுக்கு முன் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களின் நண்பர்கள் முன்விரோதத்தை வைத்து கொண்டு நேற்று இரவு பதினோரு மணி அளவில் நத்தர் நகரைச் சேர்ந்த சித்திக் (24) பஷீர் (25) அப்துல்லா (26)மூன்று பேரை ஒரு கும்பல் கம்பு கட்டைகளால் தாக்கி, அரிவாளால் வெட்டியது.

அரிவாள் வெட்டில் காயமடைந்த மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

எடமலைப்பட்டி புதூர் பயங்கரம்: இளைஞர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பல்