‘விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல்’ பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இளைஞர்!

 

‘விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல்’ பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இளைஞர்!

‘800’ திரைப்பட விவகாரத்தில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த இலங்கையை சேர்ந்த இளைஞர் ஊடகத்திடம் மன்னிப்பு கூறியிருக்கிறார்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படமான ‘800’ என்னும் திரைப்படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியிருந்தார். இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட முத்தையா படத்தில், விஜய் சேதுபதி நடிக்க கூடாது என எதிர்ப்புக் குரல் எழுந்தது.

‘விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல்’ பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இளைஞர்!

பல எதிர்ப்புகளை மீறி தனது வாழ்வியல் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டாம் என முத்தையாவும் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட விஜய் சேதுபதி, 800 படத்தில் இருந்து தான் விலகிக் கொள்வதாக கூறி “நன்றி வணக்கம்” எனக் குறிப்பிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதனிடையே விஜய் சேதுபதிக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்த போது, ட்விட்டரில் ஒரு நபர் விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல் விடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

‘விஜய் சேதுபதி மகளுக்கு ஆபாச மிரட்டல்’ பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இளைஞர்!

@ItsRithikRajh என்ற ஐடியில் ஆபாசமாக மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இந்த நிலையில், அந்த நபர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஊடகம் ஒன்றில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அந்த நபர், விஜய் சேதுபதி இடமும் தமிழ் மக்களிடமும் மன்னிப்பு கேட்பதாக அவர் கூறியிருக்கிறார். மேலும், அந்த நபரின் தாயாரும் மன்னிப்பு கோரியுள்ளார்.