‘லிப்ஃட் கேட்பது போல நடித்து’ பைக்குகளை களவாடிய இளைஞர் கைது!

 

‘லிப்ஃட் கேட்பது போல நடித்து’ பைக்குகளை களவாடிய இளைஞர் கைது!

மாங்காடு அருகே லிப்ஃட் கொடுத்தவரை தாக்கி பைக்கை களவாடிச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

வண்டலூர் – மீஞ்சூர், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் அதிகளவில் வாகன திருட்டுகள் அரங்கேறி வந்துள்ளது. இரவு நேரங்களில் பைக்கில் லிஃப்ட் கேட்பது போல நடித்து, லிஃப்ட் கொடுப்பவர்களை தாக்கி அவர்களிடம் இருந்து பைக்கை பறித்துச் செல்வது அடிக்கடி நடந்ததால், அப்பகுதி போலீசாரிடம் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளன. இத்தகைய செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்ய, மாங்காடு போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

‘லிப்ஃட் கேட்பது போல நடித்து’ பைக்குகளை களவாடிய இளைஞர் கைது!

இந்த நிலையில், குன்றத்தூரை சேர்ந்த அருண் (21) என்ற இளைஞரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதிகளில் அவர் லிஃப்ட் கேட்பது போல நடித்து அவர்களை அடித்து பைக் திருடுவதை ஒப்புக் கொண்டுள்ளார். அதோடு, அப்பகுதியில் போலீசார் நடமாட்டம் அவ்வளவாக இருக்காது என்பதால் இரவு நேரத்தில் தான் இந்த வேலையை செய்து வந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனிடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். இரவு நேரங்களில் பைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.