‘திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை’ இளைஞர் போக்சோவில் கைது!

 

‘திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை’ இளைஞர் போக்சோவில் கைது!

ஆவடி அருகே சிறுமியை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆவடி, ராம்நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியின் 17 வயது மகள், ஆவடி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த 30ம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்ற நிலையில், நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர். இதனையடுத்து ஆவடி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

‘திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை’ இளைஞர் போக்சோவில் கைது!

அதில், காமராஜர் நகரை சேர்ந்த விக்ரம் (21) என்ற இளைஞர் சிறுமியை கடத்திச் சென்றது தெரிய வந்துள்ளது. தகவலின் படி விக்ரமை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், தாம்பரம் பேருந்து நிலையத்தில் அவரை கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

‘திருமண ஆசை காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை’ இளைஞர் போக்சோவில் கைது!

கைது செய்யப்பட்ட விக்ரமிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியை திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து விக்ரமை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.