எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை… அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கும் வடமாநில இளைஞர்கள்!

 

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை… அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கும் வடமாநில இளைஞர்கள்!

சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் கொள்ளையடித்த சம்பவத்தில் டெல்லியில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இதன் பின்னணியில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அமீர் என்பவர் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவரை கைது செய்த போலீசார், இரண்டாவது நாளாக தொடர் விசாரணை நடத்தி அவரிடம் இருந்து பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை… அடுத்தடுத்து போலீசாரிடம் சிக்கும் வடமாநில இளைஞர்கள்!

போலீசாருக்கு அமீர் அளித்த வாக்குமூலத்தில், ஆறு இடத்தில் நண்பர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கொள்ளையடித்த பணத்தை ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வங்கிக் கணக்கு யாருடையது என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். எஸ்பிஐ வங்கியின் 6 ஏடிஎம் கிளைகளில் மட்டுமே தான் கொள்ளையடித்ததாக அமீர் ஒப்புக் கொண்ட நிலையில், பிற கிளைகளில் கொள்ளை அடித்தவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சென்னை எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானாவின் மேவாட் பகுதியை சேர்ந்த வீரேந்தர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமீரின் நண்பர். அமீர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை போலீசார் டெல்லியில் வீரேந்திர கைது செய்துள்ளனர்.