‘பேஸ்புக்கில் சாட்டிங்’ மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது!

 

‘பேஸ்புக்கில் சாட்டிங்’ மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது!

சென்னை கொளத்தூரில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். 11ம் வகுப்பு படிக்கும் இவரது மகள், பேஸ்புக்கில் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த அக்.10ம் தேதி மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பாததால், மாணவியின் தாய் வில்லிவாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

‘பேஸ்புக்கில் சாட்டிங்’ மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது!

அந்த புகாரின் பேரில், மாணவியை தேடும் முயற்சியில் தீவிரமாக போலீசார் இறங்கியுள்னர் . அப்போது, ஒரு இளைஞருடன் அந்த சிறுமி இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று போலீசாரின் கவனத்துக்கு எட்டியுள்ளது. அதை வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பதும் மாணவி அவருடன் தான் இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த தகவலின் படி, சேலத்துக்கு சென்ற தனிப்படை போலீசார் மாணவியை விமல்ராஜிடம் இருந்து மீட்டு சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

‘பேஸ்புக்கில் சாட்டிங்’ மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இளைஞர் போக்சோவில் கைது!

விமல்ராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பேஸ்புக் மூலம் பழகி அந்த மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி சேலத்துக்கு அழைத்து சென்றதாகவும் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, விமல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.