‘கணவரை இழந்த சித்தியுடன் தகாத உறவு’.. வேறு ஒருவருடன் பழகியதால் மதுபாட்டிலால் குத்திக்கொன்ற இளைஞர் கைது!

 

‘கணவரை இழந்த சித்தியுடன் தகாத உறவு’.. வேறு ஒருவருடன் பழகியதால் மதுபாட்டிலால் குத்திக்கொன்ற இளைஞர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மலர்(38). இவரது கணவன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில், மலர் தன் மகள்(வயது 15) மற்றும் மகன் (வயது 12) உடன் தட்டுவடை தயாரித்து விற்பனை செய்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மலர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அவர் நெடுநேரம் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை எல்லா இடங்களிலும் தேடி இருக்கின்றனர். இந்த நிலையில் மலர் ஒரு கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

‘கணவரை இழந்த சித்தியுடன் தகாத உறவு’.. வேறு ஒருவருடன் பழகியதால் மதுபாட்டிலால் குத்திக்கொன்ற இளைஞர் கைது!

 

தகவல் அறிந்து வந்த போலீசார் மலரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மலரின் சடலம் கிடந்த அதே இடத்தில் அவரது உறவினரான காந்தி (28) என்பவற்றின் பைக் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் மலருக்கும் அவருக்கும் தவறான தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காந்தியை கைது செய்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். அப்போது தான் மலரைக் கொலை செய்து விட்டதாகவும் அவர் தனது சித்தி என்றும் கணவர் இறந்த பிறகு தன்னுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கடந்த சில காலமாக வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனைத் தான் கண்டித்தும் கேட்கவில்லை என்பதால் மலரை வரவழைத்து மதுபாட்டிலால் குத்திக் கொலை செய்து விட்டதாகவும் சடலத்தைக் கால்வாயில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து காந்தியை போலீசார், சேலம் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர்.