இன்ஸ்டாகிராமில் விரித்த காதல் வலையில் சிக்கிய மாணவி.. நகை, பணம் பறித்து ஏமாற்ற முயன்றதால் கம்பி எண்ணும் வாலிபர்!

 

இன்ஸ்டாகிராமில் விரித்த காதல் வலையில் சிக்கிய மாணவி.. நகை, பணம் பறித்து ஏமாற்ற முயன்றதால் கம்பி எண்ணும் வாலிபர்!

மதுரை வில்லாபுரம் மகாலிங்கம் சாலையில் வசித்து வருபவர் விக்னேஷ்(21). இவர் அப்பகுதியில் 3 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் நண்பராக இருந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் தினமும் பேசிக் கொண்டு வந்த நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த வாலிபரும் அந்த மாணவியும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் விக்னேஷ் மாணவியிடம் தனக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தான் உதவ வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதனால் அந்த மாணவி தான் வைத்திருந்த பணம் மற்றும் அணிருந்திருந்த நகைகளை கொடுத்து உதவியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் விரித்த காதல் வலையில் சிக்கிய மாணவி.. நகை, பணம் பறித்து ஏமாற்ற முயன்றதால் கம்பி எண்ணும் வாலிபர்!

ஒரு மாதத்தில் அதனை திருப்பி தந்து விடுவதாக கூறிய நிலையில், அதனை திருப்பி தரவே இல்லையாம். அதுமட்டுமில்லாமல் மாணவியிடம் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவி விக்னேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விக்னேஷை கைது செய்த போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பணம் பறித்துக் கொண்டு ஏமாற்றி விடலாம் என்று தான் எண்ணியதாக கூறியிருக்கிறார். இதனையடுத்து போலீசார் விக்னேஷிடம் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.