’15 வயது சிறுமி கர்ப்பம்’.. உடந்தையாக இருந்த தாய், காதலன் போக்சோவில் கைது!

 

’15 வயது சிறுமி கர்ப்பம்’.. உடந்தையாக இருந்த தாய், காதலன் போக்சோவில் கைது!

வேடசந்தூர் அருகே 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலனும் சிறுமியின் தாயும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த வடமதுரை பகுதியில் வசித்து வந்த இளைஞர் பொன்னர். இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் தாயும், அதற்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.

’15 வயது சிறுமி கர்ப்பம்’.. உடந்தையாக இருந்த தாய், காதலன் போக்சோவில் கைது!

இதனையடுத்து தன் மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்த தாய், ரகசியமாக பொன்னருக்கும் மகளுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்தவர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சிறுமியின் தாயாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

’15 வயது சிறுமி கர்ப்பம்’.. உடந்தையாக இருந்த தாய், காதலன் போக்சோவில் கைது!

அப்போது சிறுமியின் தாய் அனைத்தையும் ஒப்புக் கொண்டதால், அவரையும் சிறுமியை திருமணம் செய்து கொண்ட இளைஞரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார், சிறையில் அடைத்துள்ளனர்.