வீட்டில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றியதில், இளம்பெண் பலி

 

வீட்டில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றியதில், இளம்பெண் பலி

மதுரை

மதுரையில் வீட்டில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றியதால் படுகாயமடைந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் மறவர் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி தேவி (26). இவர் நேற்று முன்தினம் முன்பு வீட்டின் வாசலில் தீபம் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றிய நிலையில், மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. அருகே இருந்தவர்கள் உடனடியாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த தேவியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

வீட்டில் தீபம் ஏற்றியபோது சேலையில் தீப்பற்றியதில், இளம்பெண் பலி

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தீ விபத்து குறித்து, தேவியின் தாயார் பூமாதேவி புகாரின் பேரில் ஆரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீபம் ஏற்றியபோது ஏற்பட்ட தீவிபத்தில் இளம்பெண் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.