குடும்ப தகராறில் இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பலி!

 

குடும்ப தகராறில் இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பலி!

தென்காசி

தென்காசி அருகே குடும்ப தகராறில் இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள பரும்பு வேம்படி காலனியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு பார்வதி(40) என்ற மனைவியும், மூன்றரை வயதில் அன்னலட்சுமி – கலைமதி என்ற இரட்டை குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று உடல்நல குறைவால் நெல்லை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தனது அண்ணன் மகளை பார்க்க செல்வதாக, பார்வதி தெரிவித்து உள்ளார்.

அதற்கு கண்ணன் தற்போது கொரோன சூழலால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கண்ணன் வெளியே சென்ற நிலையில், பார்வதி, தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

குடும்ப தகராறில் இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த பெண் பலி!

குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கண்ணன், அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பார்வதி உடல்கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பலத்த தீக்காயம் அடைந்த குழந்தைகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த, ஆழ்வார்குறிச்சி போலீசார் பார்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறிதது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 ஆண்டுகளில் பார்வதி உயிரிழந்ததால், இதுகுறித்து தென்காசி ஆர்.டி.ஓ ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.