குடும்ப தராறில் இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை – கணவர் கைது!

 

குடும்ப தராறில் இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை – கணவர் கைது!

திருப்பூர்

திருப்பூரில் குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற கணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு அனுசுயா(26) என்ற மனைவியும், 4 வயதில் மகளும் உள்ளனர். தம்பதியினர் இருவரும் திருப்பூர் அங்கேரிபாளையத்தில் தங்கி, அங்குள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மகேந்திரன், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தராறில் இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை – கணவர் கைது!

நேற்று முன்தினம் தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், அனுசுயா அம்மையப்பன் நகரில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால், அங்கு சென்ற மகேந்திரன், அறையில் இருந்த அனுசுயாவிடம் பேசி கொண்டிருந்தார். திடீரென அனுசுயா அலறும் சத்தம்கேட்டு அவரது உறவினர்கள் அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கு, மகேந்திரன் துணியால் அனுசுயாவின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.

மயங்கிய நிலையில் கிடந்த அனுசுயாவை மீட்டு, அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மகேந்திரனை நேற்று கைது செய்தனர்.