பழனி அருகே கள்ளக்காதலனுடன் வசித்த இளம்பெண் தற்கொலை!

 

பழனி அருகே கள்ளக்காதலனுடன் வசித்த இளம்பெண் தற்கொலை!

திண்டுக்கல்

பழனி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் கருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மலர்(30). இவரது கணவர் சீமான். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மலர், தாராபுரத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். அப்போது, நூற்பாலையில் உடன் பணிபுரிந்த அரியலூரை சேர்ந்த ராம்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

பழனி அருகே கள்ளக்காதலனுடன் வசித்த இளம்பெண் தற்கொலை!

இதனை தொடர்ந்து, இருவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கீரனூர் பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்ற ராம்குமார் நேற்று காலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மலர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ராம்குமார், கீரனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.