கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

 

கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

ஈரோடு

ஈரோட்டில் காதல் கணவர் உயிரிழந்த வேதனையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சண்முகப்பிரியா. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தட்சிணாமூர்த்தி திடீர் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

கணவர் இறந்த வேதனையில், இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!

இதனால் சண்முகபிரியா மன வேதனையில் இருந்து வந்துள்ளார். மேலும், தனது 2 மகன்களை எப்படி வளர்ப்பேன் என்று, உறவினர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார். இந்த நிலையில், கணவரின்றி வாழ விரும்பாத சண்முகபிரியா நேற்று வீட்டில் விஷத்தை குடித்தார். இதுகுறித்து, அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, சண்முகப்பிரியாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.