குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

அரியலூர்

அரியலூர் அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்(35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனி (31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். லாரன்ஸ், மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல் மது போதையில் வீட்டிற்கு வந்த அவர், ரஞ்சனியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில், மனமுடைந்த ரஞ்சனி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

ரஞ்சனியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து உடையார் பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.