குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

நாமக்கல்

நாமக்கல் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து, சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த குருக்கபுரத்தான் காடு பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அருண் காங்கேயன். இவரது மனைவி சுதா(26). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அருண் காங்கேயன், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுதா அன்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது உறவினர்கள் தகவலின் பேரில், நாமகிரிப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து சுதா பெற்றார் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே, திருமணமாகி 5 ஆண்டுக்குள் சுதா உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.