நன்னிலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை!

 

நன்னிலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை!

திருவாரூர்

நன்னிலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள அதம்பார் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மீரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில், விக்னேஷ் மற்றும் அவரது தாயார் மீராவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

நன்னிலம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று கணவருடன் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த மீரா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் நன்னிலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து மீராவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.