குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே குடும்ப தகராறில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜகுமாரி (29). இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தூத்துக்குடி ஆறுமுகநேரியை சேர்ந்த வரதராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 2 மாத பெண் குழந்தையும் உள்ளது. ராஜகுமாரிக்கும், அவரது மாமியார் சந்திராவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்வது தொடர்பாக சந்திராவுக்கும், ராஜகுமாரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, வரதராஜன் தனது தயாருக்கு ஆதரவாக மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜகுமாரி, கடந்த 15ஆம் தேதி இரவு வீட்டில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த ராஜகுமாரியை உறவினர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.