வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரை சேர்ந்தவர் மணிபாலன். கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி அஞ்சலாட்சி (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மணிபாலன், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி அஞ்சலாட்சியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அஞ்சலாட்சி, தென் மங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

அங்கும் சென்று மணிபாலன், வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த அஞ்சலாட்சி, வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அஞ்சலாட்சியின் தாய் சோலையம்மாள் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், கணவர் மணிபாலன், அவரது பெற்றோர் தேவராஜ் – கனகவள்ளி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.