வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

 

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கடலூர்

கடலூரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் யோகபிரியா (28). இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, கடலூர் மஞ்சகுப்பத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (36) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

இந்த நிலையில் ரமேஷ், தனது பெற்றோருடன் சேர்ந்து, யோக பிரியாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிலையில், அவரை உறவினர்கள் சமாதானம் செய்து, கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், ரமேஷ் மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால், மனமுடைந்த யோகப்பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, யோகபிரியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கடலூர் புதுநகர் போலீசார் கணவர் ரமேஷை கைது செய்தனர்.