குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை

 

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை

தேனி

உத்தமபாளையம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் சந்தோஷ் தியேட்டர் தெருவை சேர்ந்த உத்தண்டகாளை என்பவரது மகள் சாந்தினி (20). இவர் லேப் டெக்னீசியன் படித்து விட்டுவேலை தேடி வந்துள்ளார். இதனிடையே சாந்தினிக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை- கோட்டாட்சியர் விசாரணை

தம்பதியினர் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சாந்தினி தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கணவர் உடனான தகராறு காரணமாக மன வேதனையில் இருந்த வந்த அவர். வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து
தகவலறிந்த உத்தமபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டதால், உத்தமபாளையம் கோட்டாட்சியர் நிறைமதி விசாரணை செய்து வருகிறார்.