திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

 

திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி மேல் மாமுடிமானப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சந்திரா (25). இவர், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (34) என்பவரை காதலித்து, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், சந்திராவுக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் முழுமையாக குணமடையவில்லை.

திருப்பத்தூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணன் கும்பகோணத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த அவர், கடந்த 25 நாட்களுக்கு முன்பு கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த சந்திரா, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், வாழ்வில் விரக்தியடைந்த அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை தாயார் லட்சுமி வீட்டிற்கு சென்றபோது சந்திரா தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..