குத்தாலம் அருகே 1 வயது குழந்தையை கொன்று, இளம்பெண் தற்கொலை!

 

குத்தாலம் அருகே 1 வயது குழந்தையை கொன்று, இளம்பெண் தற்கொலை!

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே 1 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் விருதுநகரில் ரயில்வே ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வகுமாரி (24) என்ற மனைவியும்,1 வயதில் பெண் குழந்தையும் இருந்தனர். பார்த்திபன், விருதுநகரில் பணிபுரிவதால், செல்வகுமாரி திருவாவடுதுறையில் தனது மாமியாருடன் வசித்து வந்தார்.

குத்தாலம் அருகே 1 வயது குழந்தையை கொன்று, இளம்பெண் தற்கொலை!

இந்த நிலையில், நேற்று மாமியார் வெளியே சென்றிருந்த போது, வீட்டில் செல்வகுமாரி துக்கிட்ட நிலையிலும், குழந்தை தரையில் சடலமாகவும் கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், குத்தாலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார், செல்வகுமாரி மற்றும் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளில் செல்வகுமாரி உயிரிழந்ததால், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.