குழந்தை இல்லாத வேதனையில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

 

குழந்தை இல்லாத வேதனையில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

செங்கல்பட்டு

கல்பாக்கம் அருகே குழந்தை இல்லாத வேதனையில் தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் தினகரன். கார் ஓட்டுநர். இவரது மனைவி யோகலெட்சுமி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை இல்லை. இதனால் யோகலெட்சுமி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

குழந்தை இல்லாத வேதனையில், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை!

இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த யோகலெட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு யோகலெட்சுமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, கல்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.