தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை!

 

தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அடுத்த அழகப்பபுரத்தை சேர்ந்தவர் முத்துசங்கர். இவர் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மோனிகாவை (27) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான்.

தூத்துக்குடி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை!

இந்த நிலையில், மோனிகா, சமீபத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டு வந்த மோனிகா, நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, முத்துசங்கர் அளித்த தகவலின் பேரில் குரும்பூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து, மோனிகாவின் தந்தை அருளானந்தம் புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, திருமணமாகி 4 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.