குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் போலீசார் விசாரணை…

 

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் போலீசார் விசாரணை…

திருச்சி

துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த செட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன். இவருக்கு புவனேஸ்வரி(27) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். முருகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுஅருந்திவிட்டு வந்த முருகன், புவனேஸ்வரி உடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை… கணவரிடம் போலீசார் விசாரணை…

இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்தம்கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் உடலில் 70 சதவீத தீக்காயம் அடைந்த புவனேஸ்வரிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் முருகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.