திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை!

 

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை!

திருப்பூர்

பல்லடம் அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிரேசியா (20). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்-க்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்திக் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கார்த்திக் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை!

அப்போது, வீட்டில் தனியாக இருந்த கிரேசியா, தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மதிய உணவிற்காக வீட்டிற்காக வந்த கார்த்தி, கிரேசியா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு கிரேசியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.

தகவல் அறிந்த பல்லடம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.