வேலைக்கு சென்ற கணவர்… வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்… கழுத்து அறுத்து கொல்லப்பட்ட மனைவி! சிவகாசியில் அதிர்ச்சி

 

வேலைக்கு சென்ற கணவர்… வீட்டில் புகுந்த மர்ம நபர்கள்… கழுத்து அறுத்து கொல்லப்பட்ட மனைவி! சிவகாசியில் அதிர்ச்சி

திருமணமான 2 மாதத்திற்குள் இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிவகாசி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகதி மோகினி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கும் பட்டாசு தொழிலாளியான செல்வ மணிகண்டன் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. சம்பவத்தன்று செல்வமணிகண்டன் பணிக்கு சென்றுவிட்டார். மனைவி பிரகதி மோகினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டிற்கு புகுந்த மர்ம நபர்கள், பிரகதி மோகினியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பிரகதி மோகினி ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கணவன் செல்வமணிமண்டனுக்கும், காவல்துறையினருக்கும் அவர்கள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர், பிரகதி மோகினியின் உடலை கைப்பற்றினர். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பணத்திற்காக கொலை நடந்துள்ளதா அல்லது வேறு யாரேனும் கொலை செய்துவிட்டு தப்பினார்களா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியாக வீட்டில் இருந்த இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சிவகாசி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.