காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்… வீட்டு வேலை என்ற பெயரில் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட கொடூரம்!

 

காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்…  வீட்டு வேலை என்ற பெயரில் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட கொடூரம்!

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் கடந்த 1 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த வெள்ளை நிற காரிலிருந்து 20 வயது பெண் ஒருவர் தூக்கிவீசப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் காரை பிடிப்பதற்குள் கார் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது.

காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்…  வீட்டு வேலை என்ற பெயரில் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட கொடூரம்!

இதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் அப்பெண் 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த பெண்ணின் பெற்றோர் பெங்களூரில் தங்கி இருந்ததாகவும், அந்த பெண் தஞ்சாவூரில் ஒரு வீட்டில் வேலை பார்க்க  வந்ததும் தெரியவந்துள்ளது. வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணை  கடந்த 4 மாதங்களாக 4 அல்லது 5 பேர் தினமும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர்.  செந்தில்குமார் மற்றும் அவரின் மனைவி ராஜம் தம்பதி வீட்டு வேலைக்கு என்று அழைத்து வந்து அந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.

காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்…  வீட்டு வேலை என்ற பெயரில் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட கொடூரம்!

அந்த பெண்ணுக்கு வங்க மொழி மட்டுமே தெரியும் என்பதால் போலீசார் வங்க மொழி பேச தெரிந்த ஒருவரை வைத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.