‘இளம் ராணுவ வீரர் குத்திக் கொலை’ : பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோகம்!

 

‘இளம் ராணுவ வீரர் குத்திக் கொலை’ : பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோகம்!

காட்பாடி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இளம் ராணுவ வீரர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த யோகராஜ் (23) மற்றும் தீபக் (23) ஆகிய இருவரும் ராணுவ வீரர்களாக லடாக் எல்லையில் பணியாற்றி வருகின்றனர். யோகராஜ் வீடு ஒன்றைக் கட்டி வருவதாலும், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காகவும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பியிருக்கிறார். அவருடன் தீபக்கும் வந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று யோகராஜின் பிறந்தநாள் என்பதால் அவரது நண்பர்கள் மதுவிருந்து கேட்டுள்ளனர்.

‘இளம் ராணுவ வீரர் குத்திக் கொலை’ : பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நேர்ந்த சோகம்!

யோகராஜ் ஒப்புக் கொண்டதால் தீபக் மற்றும் நேதாஜி(23) உட்பட மூவரும் சேர்ந்து நள்ளிரவில் மது அருந்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் மது தீர்ந்ததால் மீண்டும் வாங்குவதற்காக மெயின் ரோட்டில் அவர்கள் மூவரும் நடந்து சென்றதாக தெரிகிறது. அங்கு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பலுக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கில் வந்த கும்பல், 3 பேரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

இதில் நேதாஜி மற்றும் தீபக் படுகாயம் அடைந்த நிலையில், யோகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தீபக், நேதாஜிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், யோகராஜை கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.