கள்ளக்குறிச்சி- சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் தற்கொலை

 

கள்ளக்குறிச்சி- சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் தற்கொலை

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சின்னசேலம் அருகேயுள்ள தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் சென்னை சேலையூரில் குடும்பத்தினருடன் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவரது 16 வயது மகளுக்கு வேளச்சேரியில் உள்ள தேவலாயத்தில் பணிபுரிந்த, சின்னசேலத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்த நிலையில், இரு

கள்ளக்குறிச்சி- சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் தற்கொலை

குடும்பத்தாரையும் அழைத்து கிராமத்தினர் பஞ்சாயத்து செய்து பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் அந்த சிறுமி தொலைபேசி மூலம் சதீஷிடம் பேசி வந்துள்ளார். கொரோனா காரணமாக கோவிந்தன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், சதீஷுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த அந்த சிறுமி தன்னை வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார். இதனால், சென்னையில் இருசக்கர வாகனத்தில் சின்னசேலம் வந்த சதீஷ், அந்த சிறுமியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்படவே, சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினார். சிறுமியை மீட்டு போலீசார் மருத்துமனையில் அனுமதித்த நிலையில், அவர் உயிர் பிழைத்தார்.

கள்ளக்குறிச்சி- சிறுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர் தற்கொலை

தப்பியோடிய சதீஷை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சதீஷ், சேலம் உடையாப்பட்டி பைபாஸ் அருகே மரங்கள் அடர்ந்த புதரில் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய அம்மாபேட்டை போலீசார், இறப்பதற்கு முன் சதீஷ் எழுதிவைத்த கடிதத்தை பறிமுதல் செய்தனர். அதில், சிறுமி தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், இதனால் மனமுடைந்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் தன்னை தேடுவதால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.