நடிகை கவுதமி வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்: பரபரப்பு சம்பவம்!

 

நடிகை கவுதமி வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்: பரபரப்பு சம்பவம்!

குடிபோதையில் நடிகை கவுதமி வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொட்டிவாக்கத்தில் இருக்கும் நடிகை கவுதமி வீட்டுக்குள் இன்று காலை இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்துள்ளார். உடனே அந்த இளைஞரை கண்ட ஊழியர்கள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருப்பது தெரிய வந்ததால், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

நடிகை கவுதமி வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த இளைஞர்: பரபரப்பு சம்பவம்!

தகவலின் பேரில் கவுதமி வீட்டுக்கு வந்த போலீசார், அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெயர் பாண்டியன் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாண்டியனை கைது செய்த போலீசார் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.