மது அருந்த காசு இல்லை : தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!

 

மது அருந்த காசு இல்லை : தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!

கிருஷ்ணகிரி அருகே மது வாங்க காசு இல்லாத மன உளைச்சலில், வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரியை அடுத்த பாலகுறி கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (19). இவர் தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய நிலையில், ராயக்கோட்டை பகுதியில் இருக்கும் கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். சம்பாதிக்கும் முழு பணத்தையும் இவர் மதுவிற்கே செலவு செய்து விடுவாராம். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வேலைக்கு செல்லாமல் கோவிந்தராஜ் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.

மது அருந்த காசு இல்லை : தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்!

மது வாங்க காசு இல்லாததால் மன உளைச்சலில் இருந்த அவர், வெப்பாளம்பட்டியில் இருக்கும் மாந்தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிந்தராஜின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தராஜ் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். மது வாங்க காசு இல்லாததால் தான் கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.