ஈர கைகளால் ஃபேனை தொட்ட இளைஞர் – மின்சாரம் தாக்கி பலி!

 

ஈர கைகளால் ஃபேனை தொட்ட இளைஞர் – மின்சாரம் தாக்கி பலி!

தர்மபுரியில், ஈரக் கைகளினால் மின் விசிறியை தொட்ட இளைஞர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈர கைகளால் ஃபேனை தொட்ட இளைஞர் – மின்சாரம் தாக்கி பலி!

தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர்  திலகராஜ் மகன் கணேஷ்(27).  அந்த பகுதியில் செயல்படும் இன்டர்நெட் மையத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்தவர் மின்சாரம் தாக்கி பலி -  Simplicity

இந்த நிலையில், இன்று வீட்டில் இவர் குளித்து விட்டு வந்ததும், ஈரக் கைகளால் டேபிள் ஃபேனை இயங்கச் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள், அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.