இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் சின்ன குணிச்சி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜ்துறை (23). இவருக்கு திருமணமாகி தீபிகா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், ராஜ்துறை நேற்று காக்கங்கரை பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

செல்வனூர் பகுதி அருகே சென்றபோது ராஜ்துறை வாகனத்தின் மீது, வேலூரிலிருந்து தருமபுரி நோக்கி சென்ற டாரஸ் லாரி மோதியது. இதில் சாலையில் தடுமாறி விழுந்த ராஜ்துறையின் மீது லாரி சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் தெரிந்து சம்பவயிடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் பலி!

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, செல்வனூர் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துக்களை தடுக்க வேகத்தடை அமைக்கவும், அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும் வலியுறுத்தி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், போராட்டக்காரர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அவர்கள் கலைந்து சென்றனர்.