மாடியில் நடைபயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

 

மாடியில் நடைபயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

சென்னை:

சென்னை போரூர் அருகே வீட்டின் மாடியில் நடைபயிற்சி சென்றபோது மின்சார கம்பியின் மீது எதிர்பாராத விதமாக கை உரசியதில் மின்சாரம் பாய்ந்து
இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். போரூர் அடுத்த காரம்பாக்கம், பாரதி சாலையை சேர்ந்தவர் ராஜேஷ்(21). இவர் ஆன்லைனில் உணவு பொருட்கள்
வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

மாடியில் நடைபயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!


இன்று காலை வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது வீட்டின் மாடியை ஓட்டிச்சென்ற மின்சார கம்பி மீது எதிர்பாராத விதமாக ராஜேஷின் கை பட்டது. இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக
தெரிவித்தனர். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்யது விசாரணை செய்து வருகின்றனர்.