திருமணமாகாத விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

 

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

கன்னியாகுமரி

குமரி அருகே திருமணமாகாத விரக்தியில் இளைஞர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காத்தாடிதட்டு பகுதியை சேர்ந்தவர் சிவன் (31). கட்டிட தொழிலாளி. இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும், திருமணம் தடைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சிவன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் சிவன் மயங்கி கிடந்தார்.

திருமணமாகாத விரக்தியில் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக குமரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சிவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீசார், உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், சிவன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, அவர் திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.